search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்யா பாலன்"

    • 'காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
    • ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, சமூகத்தை ஊக்குவிக்க முடியும்.

    பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் 'காதல் தி கோர்'.

    இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்



    இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். 'காதல் தி கோர்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.

    இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-

    மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ''காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.




    மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்". என்றார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
    • படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். அவருடன் இம்ரான் ஹாஸ்மி, நசுருதீன்ஷா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படம் வெளியானது. படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.


    இந்நிலையில் கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. விழாவில் நடிகை வித்யா பாலன் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற நேர்காணலில் கலந்துரையாடினார். அதில், தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிப்பதற்கு நான் ஆர்வமுடன் இருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்குவார்கள் என நான் நம்பவில்லை.


    மக்கள் என்னால் அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும் என்று நினைத்து பார்க்கவில்லை. படத்தில் நான் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது என்னிடம் பெரும்பாலானோர் இது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை அழிக்கும் என்றனர். சிலர் எனக்கு பைத்தியம் என்று நினைத்தனர். படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்த போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் வித்தியாசமான முறையில் முயற்சி செய்து நடிப்பதால் தான் நான் இன்றும் நடிகையாக இருக்கிறேன் என்று கூறினார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


    மணிரத்னம் -கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 'கேஎச்234' படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கமல்ஹாசனோடு பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


    வித்யா பாலன் -கமல்ஹாசன்

    நடிகை வித்யா பாலன், அஜித் நடிப்பில் வெளியான 'நேர்க்கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் வித்யா பாலன் மிகவும் பிரபலமடைந்தார்.
    • வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதை நடிகைகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் வித்யா பாலனும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

     

    வித்யா பாலன்

    வித்யா பாலன்


    வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில், "என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்த படத்தின் இயக்குனரை விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்தபோது நான் சந்தித்தேன். காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்றேன். ஆனால் அவர் ஓட்டல் அறைக்கு போய் பேசுவோம் என்றார். ஓட்டல் அறைக்கு வரும்படி என்னை கட்டாயப்படுத்தினார். அவரது எண்ணம் புரிந்தது. எனவே ஓட்டல் அறைக்கு சென்று அறைக்கதவை மூடாமல் திறந்து வைத்துக்கொண்டே அவரிடம் பேசினேன். நான் கதவை மூடுவேனா என்று எதிர்பார்த்து சிறிதுநேரம் காத்து இருந்தார். நான் கதவை மூடாமல் இருந்ததால் ஒத்துழைக்க மாட்டேன் என்று புரிந்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவரது படத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டார்'' என்றார்.

    • 2005-ஆம் ஆண்டு வெளியான 'பிரினீதா' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வித்யா பாலன்.
    • சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் வித்யா பாலன் மிகவும் பிரபலமடைந்தார்.

    2005-ஆம் ஆண்டு வெளியான 'பிரினீதா' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வித்யா பாலன். 'பா', 'கஹானி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

     

    வித்யா பாலன்

    வித்யா பாலன்


    டபூ ரத்னானியின் வருடாந்திர பிரபல போட்டோஷூட்டுக்காக வித்யாபாலன் கொடுத்து உள்ள போஸ் இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது. ஒரு கையில் செய்தித்தாள் மற்றும் மறு கையில் காபி கோப்பையுடன் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்து உள்ளார். ஹீல்ஸ் மற்றும் சன்கிளாஸ் அணிந்து, செய்தித்தாளின் பின்னால் ஆடையின்றி இருப்பது போல் அந்த புகைப்படம் இருக்கிறது. ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கரீனா கபூர் வரை டபூ ரத்னானி போட்டோஷூட் செய்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×